Paarkadal Alaimele

Paarkadal Alaimele Song Lyrics In English


பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா
பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா
உந்தன் பதமலர் நிதம் தேடி பரவசமொடு பாடி
பதமலர் நிதம் தேடி பரவசமொடு பாடி
கதி பெறவே ஞானம் நீ தா தேவா

பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா

காதகனான ஒரு சோமுகன் கை கொண்டு
கடலிடையே ஒளித்த மறை நாலும்
காதகனான ஒரு சோமுகன் கை கொண்டு
கடலிடையே ஒளித்த மறை நாலும் பின்னும்
மேதினி தேன் மீளாஆஆஆ
மேதினி தேன் மீளா பாதகன் தான் மாள
மீனவதாரங் கொண்ட திருமாலே

வானவரும் தானவரும் ஆழியமுதம் கடைந்த
மந்தர கிரி தன்னை தாங்கிடவே
வானவரும் தானவரும் ஆழியமுதம் கடைந்த
மந்தர கிரி தன்னை தாங்கிடவே ஒரு
கூனுடைய ஓடு கொண்டஆஆஆஆ
கூனுடைய ஓடு கொண்ட கூர்மாவதாரமென
கோல முற்றாய் புகழும் ஓங்கிடவே

ஈனன் இரண்யாட்சனெனும் படுபாவி
இஇஇஇஆஆஆஆ
ஈனன் இரண்யாட்சனெனும் படுபாவி பாயாய்
ஏழு கடலுள் மறைத்த பூதேவி அவள்
தீன ரட்சகா சகல ஜீவ ரட்சகா
தீன ரட்சகா சகல ஜீவ ரட்சகா
எனவே மாநிலத்தை தூக்கிய வராக வடிவானவனே

எங்கிருக்கிறான் ஹரி எங்கிருக்கிறான்
அவன் எங்கிருக்கிறான் சொல்லடா
எங்கிருக்கிறான் என்ற இரணியன் சொல்லை
இடை மறித்தே அவன் பிள்ளை ஹரி
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் ஹரி
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் என
இயம்பினதால் நேர்ந்த தொல்லை நீங்கவும்
பொங்கு சின வம்பனது பூத உடலும் தசை
தின்றெழுந்த தொந்தியொடு மணிக்குடலும் உதிரம்
சிந்தவே நகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே
சங்கு சக்ர தாரனே உபகாரனே ஆதாரனே

மூவடி மண் கேட்டு வந்து மண்ணளந்து விண்ணளந்து
மாவலி சிரம் அளந்த வாமனனே
மூவடி மண் கேட்டு வந்து மண்ணளந்து விண்ணளந்து
மாவலி சிரம் அளந்த வாமனனே தந்தை
ஆவியை பறித்ததனால் சூரியகுல வைரியென
ஆவியை பறித்ததனால் சூரியகுல வைரியென
அமைந்த பரசுராமன் ஆனவனே


தேவர்களின் சிறை மீட்ட ராவணாதி உயிர் மாய்த்த
தேவர்களின் சிறை மீட்ட ராவணாதி உயிர் மாய்த்த
தசரத ஸ்ரீ ராம அவதாரனே
தசரத ஸ்ரீ ராம அவதாரனே
பூவுலகிலே உழவோர் புகழும் கலப்பை தன்னை
பூவுலகிலே உழவோர் புகழும் கலப்பை தன்னைப்
புயந்தனில் தாங்கி நின்ற பலராமனே ஏ ஏ

ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆயர்பாடி மேவிய யசோதை நந்தலாலா
ஆ ஆ ஆ
ஆயர்பாடி மேவிய யசோதை நந்தலாலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பூ பாரம் தீர்க்க பாரத போர் முடித்த சீலா
பூ பாரம் தீர்க்க பாரத போர் முடித்த சீலா
கோபால கிருஷ்ணனான ஆதிமூலா பரிபாலா

ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே

பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ர பேதகம்
பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ர பேதகம்
செய்ய அஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை
ஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே
அன்புருவாகிய கல்கி அவதாரனே
சிங்காரனே தசாவதாரன் நீயே

பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா

பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா