Paarthathenna Paarvai |
|---|
பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே
பளிங்கு மேனியில்
ஒரு பவள வீதியோ
பவள வீதியில்
ஒரு பருவத் தோணியோ
இது போதும் போதும் கண்ணா
பார்த்ததென்ன
பார்வை என்னை வாட்டுதே
பார்த்ததென்ன
முத்து நவரத்தினங்களை
முன்னாலே கொட்டி வைத்த அற்புதங்களோ
கொத்து மலர் சித்திரங்களின்
முன்னாலே தொட்டு வைத்த கற்பனைகளோ
அரங்கம் உடலானதே
அதிலே நடனம்
சுரங்கம் கடலானதே
சுகமோ நளினம்
ராஜராஜன் கோவிலே
அதில் ராகம் தாளம் கூடுதே
தேடி ஓடும் ஆவலே
ஒரு தேவ ராகம் பாடுதே
வாடிடாது பூவிலே
ஒரு மேடை போட்டுக் கூடவா
பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே
பளிங்கு மேனியில்
ஹ்ஹான்
ஒரு பவள வீதியோ
ஹஹஹா
பவள வீதியில்
ஹான்
ஒரு பருவத் தோணியோ
இது போதும் போதும் கண்ணே
பார்த்ததென்ன
பார்வை என்னை வாட்டுதே
பார்த்ததென்ன
விட்டு விட சித்தம் வருமோ
கண்ணாலே தொட்டு விட
சொர்க்கம் வருமோ
கட்டிக் கொண்டு
முத்தம் தருமோ
கட்டாமல் விட்டு விட
வெட்கம் வருமோ
இதழே ஒரு தேன் குடம்
இதயம் உலகம்
அமுதே பரிமாறிடும்
அழகே உதயம்
தேகம் என்னும் ஏட்டிலே
எழுத்தாணி போலே மாறவா
மோகம் சொல்லும் பாட்டிலே
முடியாத ஒன்றை கூறவா
தாகம் தீர்க்கும் பானமே
இது காதல் என்னும் தியானமே
பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே
பளிங்கு மேனியில்
ஹ்ஹ்ம்ம்
ஒரு பவள வீதியோ
ஹாஹா
பவள வீதியில்
ஹ்ம்ம்
ஒரு பருவத் தோணியோ
இது போதும் போதும் கண்ணா
பார்த்ததென்ன
பார்வை என்னை வாட்டுதே
கேட்டதென்ன
கேள்வி
இன்பம் ஊட்டுதே
ஆண் மற்றும் பார்த்ததென்ன
