Paarthu Konde |
---|
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
நேரம் காலம் போதாமல்
போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ
சேர்ந்து கிடக்கு
அத்தனையும் சொல்லிடத்தான்
ஆசை எனக்கு
ஜன்னல் வழி கண்கள் அது
பார்த்து கிடக்கு
உன் கொலுசொலி கேட்கும் தூரம்
சொர்க்கம் எனக்கு
உன் அன்பை விட கோபத்தில்தான்
பாசம் அதிகம்
அது உரிமையை வெளிச்சத்தில்
காட்டிடுமே
ஹோ வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்
ஹாஆஅஆ
மழலையில் உந்தன் முகம்
பார்த்த மனது
மன பெண்ணில் அந்த முகம்
தேடியதே
உந்தன் வீடு எனக்கது
தூரம் இல்லை
எந்தன் வீடும் என்னை விட்டு
பிரிவதில்லை
என் நிழலுக்கு என்னை விட
காதல் அதிகம்
அது என்னை முந்தி உந்தன் மீது
சாய்ந்திடுமே
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
ஆஅஆநேரம் காலம்
போதும் என்று
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
ஹா வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்