Paarvaiyile Oru Yekkam |
|---|
பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு
இது யாரு செஞ்ச பாவமோ
இல்ல யாரு தந்த சாபமோ
நீ ஒறவ நெனைச்சு உருகுன
நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்
நீ கனவ நெனைச்சு கலங்குன
நான் நெசமா இப்ப கதருறேன்
இது சோகம் இல்ல
அதுக்கு மேலதான்
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு
சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள
சொல்ல ஒரு வார்த்தையில்ல
பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள
கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல
சொந்தங்கள் எல்லாம்
சோகத்தில் மூழ்க
பந்தங்கள் எல்லாம்
பாசத்தில் ஏங்க
தாயின் மடியில்
இவ படுத்ததில்ல
தாயின் மொகத்த
இவ பார்த்ததில்ல
ஓ வயசே ஓ வயசே
வாழமுடியாம தவிச்சிருச்சே
பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
வெட்டி வச்ச வாழ இலை
பந்தியில சேரவில்ல
கட்டிவச்ச கோட்டையில
வாசனைய கானவில்ல
கார்த்திகை மாசத்து
மாடத்து விளக்கு
காத்துல அனையிற
நெலையில கெடக்கு
காதல் எப்பொழுதும் பரமபதம்
பாம்பும் ஏணியும் மாறிவரும்
இவ மனசே இவ மனசே
சாகமுடியாம துடிச்சிருச்சே
பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
