Paavai Nee Malaigai Paal Nila |
---|
பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
மாதமோ கார்த்திகை
மையலில் காரிகை
மன்மதன் பண்டிகை
மாலையில் காதலின் ஒத்திகை
அந்த வானோரும்
காணாத எழில் மேனகை
தமிழ் தேன் ஊரும் சொல்
பேசும் அமுதாம்பிகை
வானிலோர் தாரகை
வந்ததோ கன்னிகை
பூவுடல் மாளிகை
தேவையோர் நாழிகை
விழி மை தீட்ட
தேடும் கை அது தூரிகை
சுகம் மாறாமல் கூடும்
கை மணவாளன் கை
பாவையே ஓர் வகை
பண்புகள் நால்வகை
அம்புகள் ஐவகை
அல்லவோ என் வகை
பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
ஒரு தென்பாண்டி
சங்கத்து தமிழ் மூவகை
அதில் தேன் ஊற
நீ பாடும் இசை ஏழ் வகை
சேல்விழி வேல்வகை
சிற்றிடை நூல் வகை
தங்கியே வந்த கை
வாங்குமோ வாடகை
பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
மாதமோ கார்த்திகை
மையலில் காரிகை
மன்மதன் பண்டிகை
மாலையில் காதலின் ஒத்திகை