Paavakadai Theruvil

Paavakadai Theruvil Song Lyrics In English


பாவக்கடைத் தெருவில்
படுத்திருந்த பாவியென்னை
ஞானக் கடல் தன்னில்
நடக்கவிட்ட வேல்முருகன்
ஆறுபடை நாயகனே
அவமதிக்கும் மானிடர்க்கு
மாறுதலைக் காட்டி மனம்
திருந்தும் வேல் முருகா

சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா
சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா

பித்தனின் விளையாட்டுப்
பிழை பொறுத்தே உந்தன்
பேரருள் தந்தாய் கந்தா

கை சுமந்தாலென்ன
தலை சுமந்தாலென்ன
கந்தனைச் சுமக்கின்றது
அவன் கடன் தந்த என் மேனி
காலத்திலே வந்து
கடனையும் தீர்க்கின்றது
கடனையும் தீர்க்கின்றது

முருகா
சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா
தத்துவம் அறிந்தேன் கந்தா

மாதுமையாள் மைந்தன்
மாசிமகம் காண
மானிடம் திரள்கின்றது
மாதுமையாள் மைந்தன்
மாசிமகம் காண
மானிடம் திரள்கின்றது


இந்த மக்களின் வினை என்னும்
சிக்கலைத் தீர்க்கும் கரம்
சிக்கலில் இருக்கின்றது
கரம் சிக்கலில் இருக்கின்றது

அழகப்பன் மேனிக்கு
அழகு செய்தால் அதில்
அருள் நெறி ஜொலிக்கின்றது
திரு ஆண்டியப்பன் காலில்
ஆசிகள் பெறவேண்டி
அரசாங்கம் வருகின்றது

வெந்தணல் போல் எழுந்த
விதியினில் துடிப்போர்க்குச்
சந்தனம் தருகின்றது
நல்ல வீட்டுக் குலமகளை
விளக்கேற்றி வைக்கச் சொல்லி
குங்குமம் இடுகின்றது
மங்கல குங்குமம் இடுகின்றது

அவனிடம் போனவர்க்கு
அவனை அடைதவர்க்கு
எமனிடம் பயமில்லையே
அந்த சிவனிடம் ஓம் என்றால்
இவனிடம் பொருள் கேட்டான்
இவனுக்கு மேலில்லையே

இருவர் : உண்டான ஆயுதங்கள்
ஒன்பது எதிர்த்தாலும்
தண்டாயுதம் காக்குமே
அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு
குறையாவும் ஓடிவிடும்
கோடானு கோடி வருமே
கோடானு கோடி வருமே