Pachai Maram Ondru (Sad)

Pachai Maram Ondru (Sad) Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு

பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ

பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ

அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ

கட்டித் தங்கம் என்று
கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ


பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ

ஆசைக் கிளி அங்கே
ஊமைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில்
அமைதி எங்கே

ஆசைக் கிளி அங்கே
ஊமைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில்
அமைதி எங்கே

அன்னை என்ற தெய்வம்
தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே
உன்னை எண்ணி வாழும் கலங்காதே

பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ

Tags