Pachaimalai Chaaralile

Pachaimalai Chaaralile Song Lyrics In English


பச்சை மலைச் சாரலிலேஏஏ
பறவைக்கு நான் கண்ணி வச்சேன்ஏஏ
அந்த பறவை விழும் கண்ணியிலே

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பட்டுப் பொண்ணு பட்டதுன்னுஊ
தொட்டெடுத்துத் தோளில் வச்சுஊஊ
கட்டு மல்லி பூ முடிச்சு

கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்

சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
சத்தான காதல் கீதம் பாடுகின்றதேஏஏ
உன் தங்க இடை தாளம் போட்டு ஆடுகின்றதே

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
தீராத ஆசையின்னும் தீரவில்லையேஏ
நீ சின்ன நடை போடும் போது ஆறவில்லையே


கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்

பூப்போல உதட்டிலே புன்னகை பொங்குதே
புத்தம்புது கன்னமே பத்துக்கதை பேசுதே
வண்டாக நானும் இன்று மாறவில்லையேஏ
இந்தச் செண்டிலே தேனெடுத்து பாடவில்லையே

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பாடாத பாட்டெல்லாம் பாடுவோம் காட்டிலே
பேசாத கிளிகள் போல் பேசுவோம் கூட்டிலே
ஆகாது என்று சொல்வார் யாருமில்லையேஏ
இந்த ஆனந்த பூமியிலே காவல் இல்லையே

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்