Pachaiyilum Neeyum Pachai |
---|
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
உன் பாச்சா பலிக்குமின்னா
நீயும் நினைச்சே மச்சான்
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
உன் பாச்சா பலிக்குமின்னா
நீயும் நினைச்சே மச்சான்
பச்சையிலே பச்சே மச்சான்
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா
பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா
ஹஹான்
பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா
பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா
கண்ணு வச்சதுதான் வச்சேன்
உன் மேல் ஆசை வச்சேன்
எனக்கு வாச்ச நல்ல ஜோடியென்று
நானும் நெனச்சேன்
கண்ணு வச்சதுதான் வச்சேன்
உன் மேல் ஆசை வச்சேன்
பச்சோந்தி கூட்டம் போல
பல்லைக் காட்டி இளிக்கிறே
அச்சில்லாமே வண்டியை ஓட்ட
ஆளையும் குல்லா போடுறே
வச்சக்குறி தவறிடுமா
வலையில் விழுந்து பறந்திடுமா
வக்காலத்து கேக்க வந்த
பொய்க்கால் குதிரே துள்ளாதே
வச்சத்திதான் வச்சேன்
உன் மேல ஆசை வச்சேன்
எனக்கு வாச்ச நல்ல ஜோடி என்று
நானும் நினைச்சேன் கண்ணு
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ஆளையும் கடிக்க மொறைக்குற
நீ ஆந்தை போலவே முழிக்கிறே
என்னை காந்தம் போலவே இழுக்குற
காலம் தெரியாமே வாலிப காலத்த
தன்னந் தனியாக கழிக்குற
என்னை காட்டுப் பூச்சியாக நினைக்குற
கண்ணுக்குள்ளே நீ நடிக்குற
என் கண்ணுக்குள்ளே நீ நடிக்கிறே
எனக்கும் காதல் வேகம் இல்லன்னா நீ மலைக்குற
நீ சத்தியம் செய்தா கட்டிக்கலாம்
தாலி கட்டிக்கலாம்
நீ சம்மதப் பட்டா தொட்டுக்கலாம்
ஒண்ணு பட்டுக்கலாம்
மச்சான் சத்தியம் செய்
கண்ணு தலையில் அடிக்கிறேன்
இருவர் : பாணம் போடும் மன்மத ராஜா
சரணம் சரணம்
இன்னும் பாராமுகம் ஏனோ வரணும் வரணும்
ராஜா பாணம் போதும் மன்மத ராஜா
சரணம் சரணம்
சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்
சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்