Pachchai Maa Malaipol Meni |
---|
பச்சை மாமலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர்றே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
பச்சை மாமலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர்றே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே
ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாதம் மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாதம் மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேன்
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் கலைஞன் அம்மா
அரங்கமா நகர் உளானே