Padaithane

Padaithane Song Lyrics In English


படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

வளர்த்தானே
வளர்த்தானே மனதினில்
கவலையை வளர்த்தானே

படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

கொடுத்தானே
கொடுத்தானே மறதியை
ஆண்டவன் கொடுத்தானே

பிரித்தானே
பிரித்தானே மனதையும்
கவலையும் பிரித்தானே

படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

குரங்காய் இருந்த
மனிதன் மனதில் குழப்பம்
ஏதுமில்லை

குடும்பம் மனைவி
அண்ணன் தம்பி கூட்டம்
சிறிதுமில்லை

ஆசை பாசம்
காதலில் விழுந்தான்
அமைதியை காணவில்லை

அலைந்தான்
தவித்தான் துடித்தான்
மடிந்தான் யாருக்கும்
லாபமில்லை


படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

தன்னந்தனியே
பிறந்தவன் நெஞ்சில்
சஞ்சலம் இல்லையடா

இன்னொரு உயிரை
தன்னுடன் சேர்த்தால் என்றும்
தொல்லையடா

இத்தனை சிறிய
மனிதனின் தலையில்
எத்தனை சுமைகளடா

இருவதில் தொடங்கி
எழுவது வரைக்கும் என்றும்
மயக்கமடா

படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

வளர்த்தானே
வளர்த்தானே

மனதினில்
கவலையை வளர்த்தானே