Padu Nilave

Padu Nilave Song Lyrics In English


ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பாடு நிலாவே
தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான்
தேடினேன் கேட்காமலே
நான் வாடினேன் பாடு
நிலாவே தேன் கவிதை
பூ மலர

நீ போகும்
பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என்
பிருந்தாவனம் ஊரெங்கும்
உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன்
போகுமோ

கைதான போதும்
கை சேரவேண்டும்
உன்னோடு வாழும் ஓர்
நாளும் போதும் என்
ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலாவே
தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை
பூ மலரே

ஊரெங்கும் போகும்
என் ராகங்களே உன் வீடு
தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல்
வரம் என் நெஞ்சில் நீ ஊதும்
நாதஸ்வரம்

காவேரி வெள்ளம்
கை சேர துள்ளும்
ராகங்கள் சேரும்
தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன்
கவிதை பூ மலரே


உன் பாடலை
நான் கேட்கிறேன்

பாமாலையை
நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே

தேன் கவிதை

ஆண் & பூ மலரே