Pagaliley Chandiranai

Pagaliley Chandiranai Song Lyrics In English


பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்

பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்

இரவிலே அவனைக் காண
நானும் நடப்பேன்
இரவிலே அவனைக் காண
நானும் நடப்பேன்
அவன் எல்லோரும் பார்க்கும்படி
உயரத்தில் இருப்பான்

பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்

கடலிலே மீன் பிடிக்க
நானும் போனேன்
மீன் கரையேறிப் போனதாக
ஒருத்தி சொன்னாள்

படகிலே மனதை ஏற்றிப்
பார்க்கப் போனேன்
படகிலே மனதை ஏற்றிப்
பார்க்கப் போனேன்
அதைப் பாறையிலே மோதும்படி
ஒருத்தி சொன்னாள்

பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்


ஆலயத்தில் ஆண்டவனைப்
பார்க்கப் போனேன்
அவள் அர்த்த ஜாமப் பூஜையிலே
பார்க்கச் சொன்னாள்

மாலை ஒன்று கையில் கொண்டு
நானும் போனேன்
மாலை ஒன்று கையில் கொண்டு
நானும் போனேன்
அவள் மலரை மட்டும் உதிர்த்து விட்டுப்
போகச் சொன்னாள்

பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்

இரவிலே அவனைக் காண
நானும் நடப்பேன்
அவன் எல்லோரும் பார்க்கும்படி
உயரத்தில் இருப்பான்

பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்