Pallandu Pallandu Pallayiram |
---|
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு
நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு
நலமாக வாழியவே நல்லறம் கண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
பெண் கழுத்தில் விழுவதென்ன மூன்று முடிச்சு
ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு
ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு
கணவனுக்கே உடமை என்னும் இரண்டு முடிச்சு
மூன்று கடவுளுக்கு பயந்தவளாய் காட்டும் முடிச்சு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது
ஆஅஆஆஆஅஆ
நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது
அது நிமிர்ந்து வரும் ஆடவரை விலக சொல்வது
கோமகனின் காலில் உள்ள மிஞ்சி என்பது
அது துணிந்து வரும் வஞ்சியரை விலக சொல்வது
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
பாலைப் போல தூய்மை தன்னை
வளர்த்து கொள்கிறார்
அவர் பழத்தை போல இனிமை தன்னை
பகிர்ந்து கொள்கிறார்
பாலைப் போல தூய்மை தன்னை
வளர்த்து கொள்கிறார்
அவர் பழத்தை போல இனிமை தன்னை
பகிர்ந்து கொள்கிறார்
குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு
குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு
அது கோலம் போட்டு காட்டுவது குடும்ப விளக்கு
குடும்ப விளக்கு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு
நலமாக வாழியவே நல்லறம் கண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு