Pambu Ena Vembu Ena

Pambu Ena Vembu Ena Song Lyrics In English


அந்தமுள்ள சந்தமுள்ள செந்தமிழில்
அடியவர் தொழும் அந்தரியே
ஆதியென ஜோதியென நீதியென
சுடர்விட எழும் சுந்தரியே
அம்மா அழுதோம் தொழுதோம்
அருள்வாய் துணை நீயே

பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே

பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே

மஞ்சளோடு குங்குமத்துச்
சாந்தணிந்த மாயே
மன்னன் எனும் தட்சன் மடி
வந்துதித்த சேயே

பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே

நீ இறங்கி வா
கருணைக் கடலே
நெஞ்சிறங்கி வா அமுத சுடரே
நீ இறங்கி வா நெஞ்சிறங்கி வா வா

பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே

நெஞ்சறிந்து செய்த பிழை
ஏதும் இல்லை அம்மா
நெஞ்சுருகப் பாடுகையில்
நிற்பதென்ன சும்மா
உன்னை அன்றி கை கொடுக்க
உற்ற துணை ஏது
திக்கு திசை அற்று
மனம் தத்தளிக்கும் போது

நன்மை தரும் காளி

ஆஆஆஆஅ
நன்மை தரும் காளி
அவள் என நம்பினவர் ஏற்கும்
உன் இரண்டு சேவடியை
உச்சிதனில் ஏந்தும்

மங்கலங்கள் தந்து உதவும்
எங்கள் இறையே
இக்கணத்தில் தீர்த்து விடு
எங்கள் குறையே

பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே


மஞ்சளோடு குங்குமத்துச்
சாந்தணிந்த மாயே
மன்னன் எனும் தட்சன் மடி
வந்துதித்த சேயே

நீ இறங்கி வா
கருணைக் கடலே
நெஞ்சிறங்கி வா அமுத சுடரே
நீ இறங்கி வா நெஞ்சிறங்கி வா வா

ஆஅஆஅஆஆஆ
ஆஅஆஅஆஆஆ

மஞ்சக் குளியலும்
முத்துக் குவியலும்
அங்கம் முழுவதும்
பொங்கிப் பரவிடும்
சுந்தரியே ஓ சுந்தரியே
படபட படவென
அருள் மழை பொழியட்டும்
சுடர் விழி திறந்திடு அம்பிகையே

வட்டக்கதிரென வண்ணச் சுடரென
நீலக்கருவிழி நித்தம் ஒளி விடும்
சுந்தரியே ஓசுந்தரியே
சடசட சடவென
துயரங்கள் சரியட்டும்
அடைக்கலம் கொடுத்திடு சுந்தரியே

தர்மம் வெற்றி பெற
கர்மம் வீழ்ச்சியுற
சிம்மம் ஏறி வரும் சூலினியே
எண் வகை சிறப்புடன்
ஏழ் வகை சாகரம்
தன்வசம் கொண்டிடும் உத்தமியே

வையம் யாவும்
ஒரு கையில் ஏந்தி
அருள் தெய்வமாகி வரும் மாலினியே
சரணம் உன் திருவடி சங்கரியே
சகலமும் அறிந்திடும் சாமுண்டியே
இஷ்ட தெய்வம் என
எங்கள் முன்பு வரும்
நாயகியே நாயகியே

திருவடி தினம் தினம்
வலம்வர பலம் தர
இருளிளை கழித்திங்கு
நலம் பெற நலம் பெற
அருள் மழை நீ பொழிவாய்

தலை முதல் கால் வரை
சரம் என முத்துக்கள்
கிடுகிடு கிடுவென இறங்கிடவே
சந்தனம் வேப்பிலை
படபட படபட
பரிசுத்தம் கிடைத்துடன்
சுகம் பெறவே

அம்மா அழுதோம்
தொழுதோம் அருள்வாய்
துணை நீயே
அம்மா அழுதோம்
தொழுதோம் அருள்வாய்
துணை நீயே