Panamennada

Panamennada Song Lyrics In English


பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும் பெற்றேனடா
தத்துவத்தை கற்றேனடா
இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஹா

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

சொந்தம் இல்லை பந்தம் இல்லை
ஏறி மிதிக்கும்
தோள் மீது ஏறி நின்று
காதைக் கடிக்கும்
பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்
படுபாவி என்கின்ற பேரைக் கொடுக்கும்
பணத்தாலே நல்ல உள்ளம் பேய் ஆனது
குணத்தாலே அது மீண்டும் தாய் ஆனது

பொன்னுலகில் நீராடினேன்
கண்ணிழந்து கொண்டாடினேன்
மன்னனுக்கும் மேலாகினேன்
தன்னந்தனி ஆளாகினேன்
இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஹா

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்


காசு என்ற சொல்லின் பொருள்
குற்றம் என்பது
காசு வர ஓடி விடும்
சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர்
நேர்மை என்பது
நல்லவருக்கு காசு பணம்
தேவையற்றது
பகவானின் மணியோசை
கேட்கின்றது
பணம் என்னும் பேராசை மறைகின்றது

நல்ல புத்தி யார் தந்தது
பிள்ளையிடம் தான் வந்தது

எந்த நிலை வந்தால் என்ன
நல்ல வழி நான் செல்வது
இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஹா

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்