Pandhal Irundhaal Kodi Padarum |
---|
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்
நிலமையும் அதனை மறைத்திருக்கும்
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்
நிலமையும் அதனை மறைத்திருக்கும்
காலம் வந்தால் காய் பழுக்கும்
காத்திருந்தால் கனி கிடைக்கும்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கடல் நடுவே நீர் தீ பிடிக்கும்
இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்
கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்
அவள் கன்னம் இரண்டும் ஏன் சிவக்கும்
காதல் நெருப்பில் குளித்திருக்கும்
அன்பு கண்ணிரண்டும் அதில் பதிந்திருக்கும்
கோமள மாம்பழ கன்னத்திலே
இதழ் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்
குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
இடை தழுவும் கைகள் மாலைகளோ
உங்கள் இதயங்களும் வண்ண மலரணையோ
மடை திறக்கும் அங்கு ஆசைகளோ
சிந்தும் வார்த்தை எல்லாம் அங்கு பாவைகளோ
கண் இரண்டும் ஒளி விளக்குகளோ
இரு கனி இதழ் ரத்தின கதவுகளோ
கன்னங்களும் தங்க பாளங்களோ
என் காதலுக்கே தந்த பரிசுகளோ
காதலுக்கே தந்த பரிசுகளோ
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
இருவர் : கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்
ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா
ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா