Pani Nilave Siru Malare |
---|
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
பூங்கொடியே நீ சிரித்தால்
பேசும் தெய்வம் கண்டேன்
பூங்கொடியே நீ சிரித்தால்
பேசும் தெய்வம் கண்டேன்
மான் போலே ஓடி வரும்
அழகை பார்த்தேன் நின்றேன்
முத்து மாலையிலே
உன்னைத் தொடுத்தானோ
உந்தன் மேனியிலே தங்கத்
தாமரைப் போல்
ஒரு ஓவியம் வரைந்தானோ
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
தாய் மொழியில் வார்த்தை இல்லை
பாவம் அன்னை உள்ளம்
தாய் மொழியில் வார்த்தை இல்லை
பாவம் அன்னை உள்ளம்
தேன் மொழியில் பாடி வரும்
நீயா பாவச்சின்னம்
எந்த வேளையிலே
உன்னைப் படைத்தானோ
பெத்த தாய் மனதில்
கொண்ட வேதனை யாவையும்
தீர்த்திட மறந்தானோ
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா