Pani Padarntha |
---|
பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே
பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே
குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்
குங்குமப் பூ நிறத்தைப் பார்த்தேன்
கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன்
கண்ணீரின் சின்னம் பார்த்தேன்
கலங்கினேன்துடித்தேன்
அம்மா அம்மம்மா
நீ அழுத நிலையறிந்து
நிலவே அழுததம்மா
வானம் அழுததம்மா
வண்ண மலர் புலம்புதம்மா
கானம் அழுததம்மா
கானகமும் கலங்குதம்மா
காரணத்தைச் சொன்னால்
காளை நான் உதவி செய்வேன்
வாரணங்கள் பூட்டி வந்து
வண்ணத் தேர் ஓட்டி வந்து
தோரணங்கள் ஆடுகின்ற
தூய நகர் வீதியிலே
ஊர்வலமாய் உன்னை
உடனழைத்து நான் வருவேன்
சொல்லம்மா சொல்லென்றேன்
தூயமகள் தலை நிமிர்ந்தாள்
அமைதி தேடி உருகி நின்றேன்
அன்பு வெள்ளம் பெருக வந்தேன்
இமய முதல் குமரி வரை என்
இதயத்தையே திறந்து வைத்தேன்
உண்டு பசியாற
உலகம் வரட்டுமென்று
கண்டு தேன் கதலி
கறந்த பால் கரந்தபடி
கொண்டு வந்து வைத்து
கூப்பிட்டேன் வருகவென்று
பசியாற ஓடி வந்த
பத்துப் பேர் மத்தியிலே
பகையாக ஒருவன் வந்த
பாவத்தை என்ன சொல்வேன்
யாரை அழித்தேன்
யார் குடியை நான் கெடுத்தேன்
சீர் சுமந்து சென்றதுதான்
செய்ததொரு பாவமென்றால்
அன்னை உரைத்த மொழி
அத்தனையும் கேட்டிருந்தேன்
பின்னர் மனதில்
பெருந்துணிவு மோதி வர
பெருந்துணிவு மோதி வர
வீரமுண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
சாரம் மிக்க தர்மம் உண்டு
தர்மம் மிக்க தலைவன் உண்டு
வீரமுண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
சாரம் மிக்க தர்மம் உண்டு
தர்மம் மிக்க தலைவன் உண்டு
அன்பு நிறைந்த மகன்
அருள் நிறைந்த கருணை மகன்
பண்பு நிறைந்த மகன்
பழநாட்டின் மூத்த மகன்
இருக்கின்றான் தாயே
ஏங்காதே என்றுரைத்தேன்
அன்னை சிரித்தாள்
அடடாஓஅச்சிரிப்பில்
முன்னைத் தமிழ் மனமே
முளைத்தெழுந்து நின்றதம்மா
என்னை மறந்தேன்
இரவுலகில் சேர்ந்து விட்டேன்
கண்ணை மெல்ல மறைத்து
கற்பனையில் கலந்து விட்டேன்
கற்பனையில் கலந்து விட்டேன்
பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே
பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே