Pani Padarntha

Pani Padarntha Song Lyrics In English


பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே

பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே

குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்
குங்குமப் பூ நிறத்தைப் பார்த்தேன்
கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன்
கண்ணீரின் சின்னம் பார்த்தேன்

கலங்கினேன்துடித்தேன்
அம்மா அம்மம்மா
நீ அழுத நிலையறிந்து
நிலவே அழுததம்மா
வானம் அழுததம்மா
வண்ண மலர் புலம்புதம்மா
கானம் அழுததம்மா
கானகமும் கலங்குதம்மா

காரணத்தைச் சொன்னால்
காளை நான் உதவி செய்வேன்
வாரணங்கள் பூட்டி வந்து
வண்ணத் தேர் ஓட்டி வந்து
தோரணங்கள் ஆடுகின்ற
தூய நகர் வீதியிலே
ஊர்வலமாய் உன்னை
உடனழைத்து நான் வருவேன்
சொல்லம்மா சொல்லென்றேன்
தூயமகள் தலை நிமிர்ந்தாள்

அமைதி தேடி உருகி நின்றேன்
அன்பு வெள்ளம் பெருக வந்தேன்
இமய முதல் குமரி வரை என்
இதயத்தையே திறந்து வைத்தேன்

உண்டு பசியாற
உலகம் வரட்டுமென்று
கண்டு தேன் கதலி
கறந்த பால் கரந்தபடி
கொண்டு வந்து வைத்து
கூப்பிட்டேன் வருகவென்று

பசியாற ஓடி வந்த
பத்துப் பேர் மத்தியிலே
பகையாக ஒருவன் வந்த
பாவத்தை என்ன சொல்வேன்


யாரை அழித்தேன்
யார் குடியை நான் கெடுத்தேன்
சீர் சுமந்து சென்றதுதான்
செய்ததொரு பாவமென்றால்
அன்னை உரைத்த மொழி
அத்தனையும் கேட்டிருந்தேன்
பின்னர் மனதில்
பெருந்துணிவு மோதி வர
பெருந்துணிவு மோதி வர

வீரமுண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
சாரம் மிக்க தர்மம் உண்டு
தர்மம் மிக்க தலைவன் உண்டு

வீரமுண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
சாரம் மிக்க தர்மம் உண்டு
தர்மம் மிக்க தலைவன் உண்டு

அன்பு நிறைந்த மகன்
அருள் நிறைந்த கருணை மகன்
பண்பு நிறைந்த மகன்
பழநாட்டின் மூத்த மகன்
இருக்கின்றான் தாயே
ஏங்காதே என்றுரைத்தேன்

அன்னை சிரித்தாள்
அடடாஓஅச்சிரிப்பில்
முன்னைத் தமிழ் மனமே
முளைத்தெழுந்து நின்றதம்மா
என்னை மறந்தேன்
இரவுலகில் சேர்ந்து விட்டேன்
கண்ணை மெல்ல மறைத்து
கற்பனையில் கலந்து விட்டேன்
கற்பனையில் கலந்து விட்டேன்

பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே

பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே