Panivizhum Iravu |
---|
பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போது பூங்காற்றும்
தூங்காது வா வா வா
பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு
பூவிலே ஒரு
பாய் போட்டு பனித்துளி
தூங்க
பூவிழி இமை
மூடாமல் பைங்கிளி
ஏங்க
மாலை
விளக்கேற்றும்
நேரம் மனசில்
ஒரு கோடி பாரம்
தனித்து
வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்
தனிமையே
போ இனிமையே வா
நீரும் வேரும் சேர
வேண்டும்
பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு
காவலில் நிலை
கொள்ளாமல் தாவுதே
மனது
காரணம்
துணையில்லாமல்
வாடிடும் வயது
ஆசை கொல்லாமல்
கொல்லும் அங்கம் தாளாமல்
துள்ளும்
என்னைக் கேட்காமல்
ஓடும் இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓா்
நரகமோ சொல்
பூவும் முள்ளாய்
மாறிப் போகும்
பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போது பூங்காற்றும்
தூங்காது வா வா வா
பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு