Panja Surangale Hindholam |
---|
ஸாகமதநி
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது
புது மின்சாரம் உருவாகும்
ஆஆஆஆஆ
எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது
புது மின்சாரம் உருவாகும்
பனித்துளிக்குள்ளே கடலினை தேடி
அலைவதுதானே மனமாகும்
இலையுதிர் காலம் கிளைகளில் வாழும்
வசந்தம் மரத்தின் பொய் வேஷம்
வசந்தம் மரத்தின் பொய் வேஷம்
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
சுரங்களில் பேதம் வருகின்ற போதும்
அதுவும்தானே சங்கீதம்
சுரங்களில் பேதம் வருகின்ற போதும்
அதுவும்தானே சங்கீதம்
எரிகின்ற தீபம் கரைகின்ற போதும்
ஒளிர்வதுதானே அழகாகும்
புதுவகை ராகம் சுரங்களை மீறும்
இசையில் அதுவும் சுக நாதம்
இசையில் அதுவும் சுக நாதம்
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்