Pannodu Pirandhadhu

Pannodu Pirandhadhu Song Lyrics In English


ஓஒஓஓஒஓ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி
கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி

மண்ணோடு மலர்ந்தது மானம்
குலமகள் கொண்ட சீதனம் யாவும்

பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

செல்வோம் என்றே ஆசை எண்ணும்
அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்
சொல்வோமென்றே உள்ளம் ஓடும்
வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்ம்ம்


ம்ம்ஹீம்ம்ம்ம்ம்ஹீம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்
ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்

படிக்காத பாடங்கள் சொல்லி
முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி

இருவர் : காணாத கதை இன்று காண்போம்
அதை கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இன்று காண்போம்
ஆஅஆஅஆஅஆஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்