Papparamittai |
---|
பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி
பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி
கண்ணுல காரம்
நீ ஏத்த கதறுறேன் விட
சொல்லி காலுல கோலம்
நீ போட ஆகுறேன் பெரும்புள்ளி
ஆசையா உன்ன
நான் பாத்து கிடக்குறேன்
நுர தள்ளி ஆறுதல் கூறாம
வைக்கிற நீ நீ நீ நீ கொள்ளி
அடி பப்பர
மிட்டாயே ஒரு
கொப்பரத் தேங்காவா
ஏ காத்துல
மேடை போட்டு
கதகளி ஆடாத
காதல கோழிக்குஞ்சா
பொறிக்காத
ஆக்கிய சோறா
நீதான் அரிசியா மாத்தாத
ஆம்பள நெஞ்ச பந்தா
அமுக்காத
பூன முதுக
நீ தடவி தந்தா காட்டு
புலியா மாறுது புள்ள
வேப்பங்கொழுந்தா நீ
உருவி வந்த குங்குமப்
பூவா சிவக்குது உள்ள
உள்ள உள்ள
பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல
பாக்குற பார்வையால
பவுடரும் பூசாத பாவி நீ
என்னக் கூட்டிக் கழிக்காத
நாக்குல சூடம் ஏத்தி
நரம்புல வீசாத ஒட்டடை
போல உசுர அடிக்காத
ஏ ஊமை
மனசுல உருமி
சத்தம் உன்ன நினைச்சா
கேட்குது புள்ள வாசக் கதவுல
சாவிக் கொத்தா என்ன எதுக்கு
நீ இழுக்குற உள்ள உள்ள ஆ ஆ
பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல நீ இனிக்கப் பசியும்
மறக்குதடி