Parakkum Paingili Sirikkum Poongodi

Parakkum Paingili Sirikkum Poongodi Song Lyrics In English


ஹேய் பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா

பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா

அஞ்சி அஞ்சி இளம் வஞ்சி வந்து
எனை கெஞ்சி கெஞ்சி தொடச் சொன்னால்
தொடலாமோ
ஆண்கள் என்ற இனம் ஆவதில்லையென
அன்று சொன்ன மொழி காற்றில் விடலாமோ
சின்ன பூமேனி தாளாமல் போராடுமோ
இனி முன் போல என்னோடு வாயாடுமோ

பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா

மங்கை என்ற குலம்
மஞ்சள் நூலை இடும்
மன்னன் கைகள் தொட
மண் மேல் பிறந்ததம்மா
நேற்று இன்று அல்ல ஒரு கோடி யுகம்
பார்த்து சலித்த கதை உனக்கேன்
மறந்ததம்மா
தாளம் கூடாது என்கின்ற
பாட்டேதம்மா
தென்றல் தொடும் போது
விரும்பாத பூவேதம்மா


பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா

அல்லி நாடகத்தை
ஆடிப் பார்க்கும் இந்த
வள்ளி உன்னை இந்த ஆண்மை
வெல்லுமம்மா
அந்தி நேரம் தமிழ்
சிந்து பாடி வரும்
மந்த மாருதத்தை
கேட்டால் சொல்லுமம்மா
சேவல் கூவாமல்
பொழுதென்றும் விடியாதம்மா
நான் உதவாமல் உன்னாலே
முடியாதம்மா

பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா