Parisam Podatha Kadhali |
---|
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
மானே நாளாம் மாசம் கேட்டேன் உன் சேதி
தேனே பேச்சா பேசி தீரேன் என் வியாதி
காதோரம் ரோசாப்பூவை
நீ மோதி நாளாச்சு
பூவாசம் வீசும் காத்து
அடடா உன் பெருமூச்சு
பத்துவிரலும் உன்னைக் கொத்த வருமே
நெஞ்சுக்குள்ள அந்தப்புரம்
வஞ்சிக்கொடி தந்த வரம்
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
ஏதோ ஏதோ சேதி நானோ பெண் ஜாதி
தானே நூலாய் மாறும் ஆஹா என் மேனி
மேலோடு பார்த்தால் போதும்
திகட்டாத அனுபந்தம்
நீ தீண்டும் நேரம்தானே
பொருள் மாறும் தலையங்கம்
சின்ன வயசு கொஞ்சம் மெல்லப் பழகு
தன்னனானா என்று வரும்
பெண்ணுக்குள்ளே இன்பஸ்வரம்
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி