Paruvam Uruga Idhayam Thavikka |
---|
பாடலாசிரியர் : வாலி
ஆஆஆஆஹா ஹா ஆஆஆஹ்ஆஆ
பருவம் உருக இதயம் தவிக்க இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க அலை பொங்க இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா கை சேராதோ நீ வா என் கண்ணா இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா கை சேராதோ நீ வா என் கண்ணா
பருவம் உருக இதயம் தவிக்க அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க நானே தொடுவேனே இந்த பிருந்தாவனம் தந்த போதை இவள் கொண்டாளோ சின்னப் பெண் ராதை இந்த பிருந்தாவனம் தந்த போதை இவள் கொண்டாளோ சின்னப் பெண் ராதை
பொழுதோடு வந்தானோ பூ அம்பு போட்டானோ சிங்கார வண்ணன் கண்ணன் முத்தம் வைத்தானோ முத்தாடக் கூடாதோ கன்னங்கள் மின்னாதோ கையோடு அள்ள அள்ள காதல் வராதோ
மனம் போல் அவதாரம் அது போல் அலங்காரம் இது போல் எந்நாளும் இரு வேஷம்தான் ராகங்கள் ஆயிரம் தான் வேங்குழல் ஒன்றேதான் ரூபம் ஆயிரம்தான் இதயம் ஒன்றேதான் நான்தான் நீ அல்லவோ இங்கு நீயே என் இள நெஞ்சின் சங்கீதம்
பருவம் உருக இதயம் தவிக்க அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க நானே தொடுவேனே இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா கை சேராதோ நீ வா என் கண்ணா இந்த பிருந்தாவனம் தந்த போதை இவள் கொண்டாளோ சின்னப் பெண் ராதை
தேன் மல்லி வாடாதோ தெம்மாங்கு பாடாதோ செவ்வண்டு கொஞ்சக் கொஞ்ச தேனும் சிந்தாதா நீராட வந்தாயோ நான் என்ன தேனாறோ ஆனந்தம் ஏதோ கண்டேன் கண்ணா நீ வாழ்க
முத்தம் வைத்தாலும் மடியில் விழுந்தாலும் நித்தம் கள்ளூறும் ஸ்ரீ தேவியே அள்ளி அணைத்தாலே அங்கம் துடித்தேனே ஆடும் புதுப் பூவும் தேவனின் வசம் தானே மேனி அமுதாகுமோ பசி வேளை உன் அழகெந்தன் அருள் வெள்ளம்
பருவம் உருக இதயம் தவிக்க இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க அலை பொங்க இந்த பிருந்தாவனம் தந்த போதை இவள் கொண்டாளோ சின்னப் பெண் ராதை இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா கை சேராதோ நீ வா என் கண்ணா