Pathinettu Vayadhu Paruvathin Nilavu

Pathinettu Vayadhu Paruvathin Nilavu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் வர்மா

பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவேவாவா

பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவேவாவா

நாணம் வந்து ஆசை மீது திரைப் போட்டபோது
சொல்லிக் கொள்ள அச்சம் கொண்டு துடித்தாளே மாது
மங்கை உந்தன் நாணம் தீர மலர்க் கோடி தந்தேன்
இளங்காதல் வானில் நீந்த ரதம் கொண்டு வந்தேன்

உறவுகள் உண்டாகுமே
இரவுகள் திண்டாடுமே
உறவுகள் உண்டாகுமே
இரவுகள் திண்டாடுமே
என் நெஞ்சிலே
தேனாறுதான்
பாய்ந்தோடவேவாவா


தென்றல் தேடும் பூவைப் போலே உனைத் தேடி வந்தேன்
கண்ணே உன்னைக் காணும்போது சொர்க்கம் ஒன்று கண்டேன்
உந்தன் தோளில் ஆடும் சோலை மயிலாகி நின்றேன்
மன்னன் கைகள் வீணை மீட்ட மலர்மேனி தந்தேன்

கருவிழி பந்தாடட்டும்
கனியுடல் ஒன்றாகட்டும்
கருவிழி பந்தாடட்டும்
கனியுடல் ஒன்றாகட்டும்
என் நெஞ்சிலே
தேனாறுதான்
பாய்ந்தோடவேவாவா

பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவேவாவா