Pattadhellaam Podhumaa |
---|
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே
உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியது எங்கே
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளேசக்தி வந்தாளே
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
சுதி இழந்த ராகத்திலே சுகம் இருக்காது
நல்ல சொந்தம் கொஞ்சம் விலகி நின்றால் உறவிருக்காது
இரண்டும் கெட்ட நிலையினிலே அன்பிருக்காது
அந்த இடைவெளியில் வளர்ந்த பிள்ளை
ஒழுங்கு பெறாது ஒழுங்கு பெறாது
உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
அடிக்க ஒன்று அணைக்க ஒன்று இல்லறத்திலே
இங்கு அவையிரண்டும் பிரிந்ததுதான்
இந்த நிலையிலே
குடித்தனத்தில் தவறு வந்தால் திருத்திக் கொள்ளலாம்
நம் குடும்பத்தையே பிரித்துக் கொண்டால்
கிணற்றில் வீழலாம் கிணற்றில் வீழலாம்
உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
ரத்தம் உள்ள காலத்திலே புத்தி மாறுது
அந்த புத்தி கெட்ட பிறகுதானே அந்த ரத்தம் பேசுது
சத்தியோடு சிவனைச் சேர்த்த சைவ தத்துவம்
நல்ல தம்பதியர் வாழ்வதற்கோர்
தர்ம தத்துவம் தர்ம தத்துவம்
ஹஹஹஹஹ்ஹாஹ்
ஹஹஹஹஹா
ஹஹாஹ்ஹா
ஹஹாஹ்ஹாஹஹா
உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே
எங்கே எங்கே
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளேசக்தி வந்தாளே
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே