Pattathu Rajavum |
---|
பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது
பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது
ஏழை என்ற இல்லாத ஜாதி
யாராலே உண்டானது
சில கோழை கும்பல்தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
ஏழை என்ற இல்லாத ஜாதி
யாராலே உண்டானது
சில கோழை கும்பல்தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
கோமகன் பொன் மகள் கேவலம் மீனவன்
எனையே காதலித்தாள்
பூமியில் யாவரும் ஓரினம்தான் எனும்
நீதியை ஆதரித்தாள்
நீதியை ஆதரித்தாள்
பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது
மாமா உங்க முன்னேற்றம் எங்கள்
கண்ணீரில்தான் வந்தது
அட ராமா உண்மை சொன்னாலே கோபம்
என் மேலே ஏன் வந்தது
மாமா உங்க முன்னேற்றம் எங்கள்
கண்ணீரில்தான் வந்தது
அட ராமா உண்மை சொன்னாலே கோபம்
என் மேலே ஏன் வந்தது
நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்
சிறையாய் இருக்குதய்யா
நான் கொண்ட நாணயம் நாக்கிலும் நெஞ்சிலும்
நிறைவாய் இருக்குதையா
நிறைவாய் இருக்குதையா
பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது
கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு
அதுதான் பாடமையா
நான் என்ன சொல்வது நாட்டினில் நடப்பதை
கண் கொண்டு பாருமையா
கண் கொண்டு பாருமையா
பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது