Pattu Esa Pattu

Pattu Esa Pattu Song Lyrics In English


கூவாமல் சோலைக் குயில்
கூண்டுக்குள் வாழ்கின்றதே
சோகத்தில் ஆள்கிறதே
ஆவாரம் பூவே நீ வா

பாட்டு எசப் பாட்டு
கேட்டு இதக் கேட்டு
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு
சின்னக் கிளி என வெளியே வா
இந்த செந்தமிழ் செல்வன் இங்கு
நல்ல இசை ஒன்று படித்தேன் வா
ஆவாரம் பூவே நீ வாஆஅ
பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு

பட்டுப் பூச்சி போலே
வட்டம் போடும் நாளில்
கட்டுக் காவல் ஏம்மா
கன்னிப் பாவை வாழ்வில்
தன்னைத் தானே யாரும்
கட்டிப் போட்டதில்லை
தென்றல் காற்றுக்கேது
துள்ளிப் பாய எல்லை

உன்னை வருத்திடும்
எண்ணச் சுமைகளும்
இன்றுதான் சென்றது
வெட்ட வெளியிலே
வண்ணக் கிளி என
நீந்தும் நாள் வந்தது

ஆவாரம் பூவே நீ வாஆஅ
பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு


தெற்கே நோக்கிப் போகும்
தண்ணீர் கொண்ட மேகம்
மண்ணின் மீது தூறல்
மெல்ல போடும் நேரம்
செக்கர் வானம் பூமி
சொர்க்கம் போலக் காணும்
சாரல் வந்து வீசும்
சாயங்கால நேரம்

அந்திப் பொழுதிலே
சிந்தும் அழகெல்லாம்
அம்மம்மா ஓவியம்
கண்டு ரசிக்கவா
கண்கள் களிக்கவா
இன்பம் தான் ஜீவிதம்

ஆவாரம் பூவே நீ வாஆஅ
பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு
சின்னக் கிளி என வெளியே வா
இந்த செந்தமிழ் செல்வன் இங்கு
நல்ல இசை ஒன்று படித்தேன் வா
ஆவாரம் பூவே நீ வாஆஅ