Payanangal |
---|
மேகம் கலைந்தாலும்
வானம் கலையாதே
எண்ணம் கரைந்தாலும்
உன் வண்ணம் கரையாதே
இமைகள் ஒன்றாக தேடும் வழி
மறைந்து போனது எங்கே
சொல்ல வார்த்தைகள் சொல்லும் வழி
உணர்வுகளாய் இங்கே
காயங்கள் ஆறும் மாறும்
ஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓ
தயக்கங்கள் ஏன் சொல் அன்பே
தவறிய வழிகள் கண்டேன்
என் மூச்சு காற்றே
இன்னோர் வலியை தாங்குமே
மாற்றத்தை நாம் முயன்றும் தாங்கிடுமோ
வழி தேடும் பொழுது
விருப்பங்கள் இடம் மாறிடுமோ
விடை தேடும் வழியில்
பயணங்கள் முடிந்தோடிடுமோ
தீரா சோகம் தீராவும்
ஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓ