Payandhal Aaguma |
---|
பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின் பந்தலிலே பல பேர்கள் முன்னாலே பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்
சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா மருமகள் தனைத் தேட என் தந்தை இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா
சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல் என் மீது காதலே கொண்டதேன் காதலே கொண்டதேன் கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன் பயந்தால் ஆகுமா
காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையா
காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையாஓஒஓ சரியா நியாயமா உன் வார்த்தை முறையா
போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே
வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது
சந்தோஷமாய் வாழவே சந்தோஷமாய் வாழவே தந்தையைக் கேட்டே கல்யாணம் நான் செய்குவேன்
இருவர் : பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின் பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்