Penjaakkaa Mazha Thuliyo

Penjaakkaa Mazha Thuliyo Song Lyrics In English


பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு

என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும்
என்ன கொறை
நான் சேத்துக்குள்ள பூத்து வந்த
செந்தாமரை
உன்ன ஒரு தலையா காதலிச்சா
தறுதலையா சொல்லு தொரை

பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு

சொத்து பத்து வேணுமுன்னு
உன்ன கேட்டாளா
பத்து காசு நெத்தி போட்டு
போதும் கண்ணாளா
காத்து மழை குளுருக்கொரு
கம்பளி கேட்டாளா
கட்டிக்கிட்டு அணைக்கும் வெப்பம்
போதும் கண்ணாளா

கால் வளர்ந்த ஆம்பிளைய
ஆஅஆஅஹாஆ
கால் வளர்ந்த ஆம்பிளைய
கண்ணெடுத்து பாரு
என் கண்ணுக்குள்ள நீரு
நான் கட்டிவச்ச கற்பு எல்லாம்
கொட்டி தரேன் கூடையில

பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு


மூணு முடி கயிறு போட்டா
நான் உன் பொண்டாட்டி
மூணு முழம் கயிறு வேணும்
நீயும் இல்லாட்டி

கட்டிக்கிட்டு காதல் பண்ண
எண்ணம் வராட்டி
திட்டி ரெண்டு வார்த்தை சொல்லு
என்ன பாராட்டி

அத்து வன காட்டுக்குள்ள
ஆஅஆஅஹாஆ
அத்து வன காட்டுக்குள்ள
ஒத்தையில இருக்கேன்
நான் உன்ன நம்பி இருக்கேன்
உன் எச்சி சோத்த பிச்ச கேட்டு
ராப்பகலா நான் கிடக்கேன்

பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு

என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும்
என்ன கொறை
நான் சேத்துக்குள்ள பூத்து வந்த
செந்தாமரை
உன்ன ஒரு தலையா காதலிச்சா
தறுதலையா சொல்லு தொரை