Penne Penne

Penne Penne Song Lyrics In English


ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ ஆஹா
ஆஹா ஆஹா ஆஆ

பெண்ணே பெண்ணே
அலைகிறேன் அன்றில் ஆகி
அழுகிறேன் பெண்ணே பெண்ணே
நீயும் எங்கே என்றே தேடி
திகைக்கிறேன்

நீ சொல்லாததால்
மொழி இல்லை நீ
செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ தாராததால் நிழல் இல்லை

உயிர் போனாலும்
போகட்டும் இப்போதே
பார்த்தாக வேண்டும் நான்
உன்னை உன்னை

ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ

ஓ பெண்ணே
பெண்ணே அலைகிறேன்
அன்றில் ஆகி அழுகிறேன்

நானும் உன்னை
காணும் வரை என் வாழ்வில்
ஏதோ குறை உன்னை கண்ட
அந்நாள் முதல் அன்றாடம்
மூன்றாம் பிறை

கைகள் சேர்க்க
கண்கள் கோர்க்க நான்
கேட்டேனே அன்பின் சிறை
பார்க்கும்போதே பாவை சிலை
காணாமல் போன கதை

ஆண் & என்னை வா
என்றாய் நீ எட்டி ஓடோடி
பக்கத்தில் வந்தேன் கண்கள்
பொய் சொன்னதால் கானல்
நீரைதான் நான் பார்த்து நின்றேன்

சாலை ஓரத்தில்
பூத்தென்றல் ரூபத்தில்
நீ வந்தாய் நான் தானே
புல்லாங்குழல்

ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ


ஓ பெண்ணே
பெண்ணே அலைகிறேன்
அன்றில் ஆகி அழுகிறேன்

ஆ ஆ ஆ ஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ

காற்றை தூதாக
நான் விட கண்ணே உன்
கூந்தல் கோதி பாராதோ
உன் கண்ணின் மை பூசி
நீவிட காற்றும் பெண்ணாகி
இங்கு வாராதோ

ஆண் & முன்னும்
முன்னூறு ஆண்டுகள்
ஒன்றாய் நாம் வாழ்ந்த
ஞாபகம் ஏங்கி நான் பெற்ற
என் வரம் ஹையோ
இப்போது யாரிடம்

ஆண் & உன்னை
பாராது முத்தம் தாராது
இனி தூங்காது என் கண்களே

பெண்ணே பெண்ணே
அலைகிறேன் அன்றில் ஆகி
அழுகிறேன் பெண்ணே பெண்ணே
நீயும் எங்கே என்றே தேடி
திகைக்கிறேன்

நீ சொல்லாததால்
மொழி இல்லை நீ
செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ தாராததால் நிழல் இல்லை

உயிர் போனாலும்
போகட்டும் இப்போதே
பார்த்தாக வேண்டும் நான்
உன்னை உன்னை

ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ ஆஹா
ஆஹா ஆஹா ஆஆ