Pennullame Ponnanadhu |
---|
பெண்ணுள்ளமே பொன்னானது
பெருமைக்கென்றே உருவானது
அது கொண்டாடும் நன் நாளிது
பெண்ணுள்ளமே பொன்னானது
பெண்ணையே உலகின்
கண்ணென சொல்லி நல்வழி காட்டுவோம்
தன்னையே நம்பு தைரியம் கொண்டு
பெண்மையை போற்றுவோம்
பெண்ணுள்ளமே பொன்னானது
பணத்தாலே உலகத்தை விலை பேசடி
பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி
பணத்தாலே உலகத்தை விலை பேசடி
பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி
நாணமென்பார் அச்சமென்பார் நமக்கேனடி
அடிமை நிலை அந்தக் காலம்
புதுமை நிலை இந்தக் கோலம்
அடிமை நிலை அந்தக் காலம்
புதுமை நிலை இந்தக் கோலம்
காலம் மாறும் வேளையிலே கோலம் மாறுமடி
மேலை நாட்டு உறவினிலே ஆவல் மீறுதடி
வா புது உலகையே நாம் உருவாக்குவோம்
எந்நாளும் முன்னேறுவோம்
பார் என்னும் சொல்லும் உலகையே
சுற்றி பாரடி பூங்கொடி
பாரதி சொன்ன பெண்ணையும்
கொஞ்சம் மிஞ்சினால் என்னடி
பெண்ணுள்ளமே
லாலாலலலலா
பொன்னானது
லாலாலலலலா
பெண்ணுள்ளமே பொன்னானது
பெருமைக்கென்றே உருவானது
அது கொண்டாடும் நன் நாளிது
வெறும் கையில் முழம் போடக் கூடாதடி
வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி
வெறும் கையில் முழம் போடக் கூடாதடி
வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி
நடை மாறலாம் இடம் மாறலாம் நிலை மாறலாமா
உள்ளபடி ஒன்றே ஒன்று
உனது வழி எங்கே சொல்லு
உள்ளபடி ஒன்றே ஒன்று
உனது வழி எங்கே சொல்லு
ஆசை வளரும் மனதினிலே தேவை அதிகமடி
ஆடை குறையும் புதுமையிலே மோகம் கூடுமடி
வா அன்பு வழியை நாம் உருவாக்குவோம்
எந்நாளும் முன்னேறுவோம்
பாரதி கண்ட பெண்ணிடம் நல்ல
பண்பையும் பாரடி
பணிவுடன் நெஞ்சில் கனிவுடன் வாழ
சொன்னதை கேளடி
பெண்கள் : பெண்ணுள்ளமே
லாலாலலலலா
பெண்கள் : பொன்னானது
லாலாலலலலா
பெண்ணுள்ளமே பொன்னானது
பெருமைக்கென்றே உருவானது
அது கொண்டாடும் நன் நாளிது