Perai Sollalama |
---|
இசை அமைப்பாளர் : கே வி மகாதேவன்
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
பேரைச் சொல்லலாமா ஆஆ
பெருமைக்கு உரியவன் தலைவன்
ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன்
பெருமைக்கு உரியவன் தலைவன்
ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன்
உரிமையிலே அவன் துணைவன்
உரிமையிலே அவன் துணைவன்
நெஞ்சில் உறைந்தவன்
கண்ணில் நிறைந்து நிற்பவன்
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
பேரைச் சொல்லலாமா ஆஆ
மானே என்றும் தேனென்றும்
ம்ம்ம்ம்ம்
மயிலே என்றும் குயிலென்றும்
நீ என்னை அழைப்பது எப்படியோ
நான் உன்னை அழைப்பேன் அப்படியே
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
பேரைச் சொல்லலாமா ஆஆ
அத்தான் என்றால் உருகாதா
அன்பே என்றால் பெருகாதா
அத்தான் என்றால் உருகாதா
அன்பே என்றால் பெருகாதா
கண்ணா என்றால் மயங்காதா
கண்ணா என்றால் மயங்காதா
காதல் அதிலே விளங்காதா
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
பேரைச் சொல்லலாமா ஆஆ