Perazhagu Meni |
---|
பேரழகு மேனி கொண்டேன்
ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
காவலென்ன வேலி என்ன
பேரழகு மேனி கொண்டேன்
ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
காவலென்ன வேலி என்ன
நான் சிரித்த நேரத்திலே
நான் நினைத்த வாழ்க்கையில்லை
நான் வளர்ந்த பாதையிலே
நாலு பக்கம் வேலியில்லை
பாசத்துக்கு மனதை வைத்தேன்
வாழ்வதற்கு அழகை வைத்தேன்
உன் உறவின் ஆதரவில்
காலமென்றும் மகிழ்ந்திருப்பேன்
பேரழகு மேனி கொண்டேன்
ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
காவலென்ன வேலி என்ன
வட்டத்துக்குள் சதுரம் ஒன்று
சதுரத்தில் வட்டம் ஒன்று
உள்ளத்துக்குள் உள்ளம் என்று
ஒன்று பட்ட பிணைப்பும் உண்டு
கோடி மலர் வாங்கி வந்து
கூந்தல் தனில் சூட்டி வைத்தேன்
வாழ வைத்து பார்ப்பதொன்றே
ஏழை எந்தன் ஆசையம்மா
பேரழகு மேனி கொண்டேன்
ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
காவலென்ன வேலி என்ன
காவலென்ன வேலி என்ன