Pesu Ennanbe

Pesu Ennanbe Song Lyrics In English


எஸ் பி சைலஜா மற்றும் சசிரேகா

பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மானே மௌனம் ஏன்
மானே மௌனம் ஏன்

பேசு என் அன்பே
ஆஹான்
உன் அன்பை
ஆஹான்
என்னென்பேன்

நீ அணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது துடிக்குது
தீ அணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது அழைக்குது
வா வா மன்னவா

கோடைக் காலம் வாடை என்று
வாடைக் காலம் கோடை என்று
உன்னை அணைப்பேன்
மானே இதற்கு மேல்
இனியும் ஓர் விளக்கம் ஏன்


பேசு என் அன்பே
ஆஹான்
உன் அன்பை
ஆஹான்
என்னென்பேன்

மௌனம் என்ற பாஷை கொண்டு
பெண் பேசுது கண் பேசுது
பேசப் பேச ஆசை நெஞ்சில்
பால் ஊறுது தேன் ஊறுது
காதல் மீறுது
மாலை கொண்ட நாதன் என்று
மஞ்சம் வந்த மங்கை இன்று
சித்தம் தெளிந்தாள் வாவ்
கண்ணா மயக்கமா கலக்கமா
நடக்குமா பயந்துட்டியா

பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மன்னா மௌனம் ஏன்
மன்னா மௌனம் ஏன்

பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்