Petretuthu Peyarumittu |
---|
கண் மூடி கதை முடித்தாய்
கனலோடு உறவு கொண்டாய்
கரிய புகை தேர் ஏறி
காற்றோடு கலந்து விட்டாய்
மேகங்கள் ஆனாய் விண்மீனாய் மாறி விட்டாய்
ராகங்கள் போலே ஒளியிருக்க உருவிழந்தாய்
பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பொட்டு வைத்து பூ முடித்து
அனைத்திருப்பாயே
பொட்டு வைத்து பூ முடித்து
அனைத்திருப்பாயே
உன் பொன் உடலை தீயினிலே
அனைத்து விட்டாயே
பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
தனை மறந்து பிள்ளைகளை
பார்த்திருந்தாயே
வழி தவறும் போது வேலியிட்டு
காத்திருந்தாயே
புது மகளை மருமகளை கொண்டு வந்தாயே
நீ பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே
ஏஏஏ
பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே
காலம் வரும் வேளையிலே
காலன் வந்தானே
உள்ளம் கனியும் முன்னே பாவி அவன்
காய் பறித்தானே
பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
ஏழை மகள் எங்கு செல்வேன்
யாரிடம் சொல்வேன்
எனையறிந்த ஓர் உயிரை இழந்து விட்டானே
எண்களின் தாயே நீ எங்கு சென்றாயோ
இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் என்று சேருமோ
வாழ்க்கை என்ன ஆகுமோஆ
என்ன ஆகுமோ
பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே