Petretuthu Peyarumittu

Petretuthu Peyarumittu Song Lyrics In English


கண் மூடி கதை முடித்தாய்
கனலோடு உறவு கொண்டாய்
கரிய புகை தேர் ஏறி
காற்றோடு கலந்து விட்டாய்
மேகங்கள் ஆனாய் விண்மீனாய் மாறி விட்டாய்
ராகங்கள் போலே ஒளியிருக்க உருவிழந்தாய்

பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே

பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே

பொட்டு வைத்து பூ முடித்து
அனைத்திருப்பாயே
பொட்டு வைத்து பூ முடித்து
அனைத்திருப்பாயே
உன் பொன் உடலை தீயினிலே
அனைத்து விட்டாயே

பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே

தனை மறந்து பிள்ளைகளை
பார்த்திருந்தாயே
வழி தவறும் போது வேலியிட்டு
காத்திருந்தாயே
புது மகளை மருமகளை கொண்டு வந்தாயே
நீ பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே
ஏஏஏ
பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே


காலம் வரும் வேளையிலே
காலன் வந்தானே
உள்ளம் கனியும் முன்னே பாவி அவன்
காய் பறித்தானே

பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே

ஏழை மகள் எங்கு செல்வேன்
யாரிடம் சொல்வேன்
எனையறிந்த ஓர் உயிரை இழந்து விட்டானே
எண்களின் தாயே நீ எங்கு சென்றாயோ
இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் என்று சேருமோ
வாழ்க்கை என்ன ஆகுமோஆ
என்ன ஆகுமோ

பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே