Pillai Kali Theera |
---|
முத்தே மரகதமே
முக்கனியே சர்க்கரையே
கொத்து மருக்கொழுந்தே
கோடை பலாப்பழமே
தத்தும் கிளியே
தடாகத்து தாமரையே
சந்தன சோலையே
சாமந்தி பூக்காடே
வடக்கு பனிமலையே
பனிமலையின் குளிர்க்காற்றே
குளிர் காற்றில் சலசலக்கும்
ஓடை இளந்தண்ணீரே
இருவர் : குலம் காக்க வந்த எங்கள்
கோமகனே தாலேலோ தாலே தாலேலோ
பிள்ளைக்கலி தீர
என் பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
பிள்ளைக் கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ
நெஞ்சுக்குத்தான் தெரியும்
அது நினைத்திருந்த நேரம்
கண்ணுக்குத்தான் தெரியும்
அது காத்திருந்த காலம்
நெஞ்சுக்குத்தான் தெரியும்
அது நினைத்திருந்த நேரம்
கண்ணுக்குத்தான் தெரியும்
அது காத்திருந்த காலம்
பெண்ணுக்குத்தான் தெரியும்
உன்னை சுமந்திருந்த கோலம்
பெண்ணுக்குத்தான் தெரியும்
உன்னை சுமந்திருந்த கோலம்
பிள்ளைக்குத்தான் தெரியும்
அன்னை மனதில் உள்ள பாசம்
பிள்ளைக்கலி தீர
என் பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
இருவர் : ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ
வாழ்ந்த நாளும் ஒன்று
நீ வளந்த நாளும் ஒன்று
சுமந்த நாளும் ஒன்று
பால் சுரந்த நாளும் ஒன்று
வாழ்ந்த நாளும் ஒன்று
நீ வளந்த நாளும் ஒன்று
சுமந்த நாளும் ஒன்று
பால் சுரந்த நாளும் ஒன்று
யார் எடுத்தால் என்ன
உன் தாயின் மனம் மென்மை
யார் எடுத்தால் என்ன
உன் தாயின் மனம் மென்மை
யார் கொடுத்தால் என்ன
கண்ணே பாலின் நிறம் வெண்மை
சிப்பி தந்த முத்து
இது தெய்வம் தந்த சொத்து
உன்னை பெற்றெடுத்தாள் அன்னை
நான் தத்தெடுத்தேன் உன்னை
இருவர் : ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ