Pillai Thamarai

Pillai Thamarai Song Lyrics In English


லாரே ரார ரார ராரே
ரார ரா ரா ரா
லாரே ரார ரார ராரே
ராரே ரா ரா ரா

பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

இந்த தாள்வார வீட்டுக்குள்
தேவாரம் நீ
என் தாய்போல வாழ்கின்ற
ஆதராம் நீ
விழியோரம் கண்ணீரை
வேரோடு அறுப்பாய்

பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

ஆஆஆஆஆஅ
ஆஆஆஅஆஅஆ

ஓ ஓ ஓ நூறு பூக்களும்
ஓர் காம்பில் பூக்கும் காலங்கள்
இது தானடி ஓ ஹோ இது தானடி
இரண்டு வீட்டுக்கு
ஓர் வாசல் இங்கு காண்கிறோம்
நாம் தானடி ஓ ஹோ நாம் தானடி

ஒரு சிலந்தி கூட்டமாய்
பாச வலைகள் பின்னுவோம்
ஒரு வைக்கோல் கூட்டுக்குள்
பல குருவியாய் வாழ்கிறோம்
நம் கைகளிலே கைகளிலே
ஆயுள் ரேகை நூறு ஆண்டு
அது கணிக்கும்
ஒருவர் விழியில் ஒருவர் விழிப்போம்


பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா ஆஅ
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா
ஆஆஆஆஆஅ

ஓஹோ ஓ விண்மீன் பந்தலில்
நாம் தானே வாழ்கின்றோம்
நிலவின் மடியினில்
நாம் தானே துயில்கின்றோம்
இங்கு நான் உன்னை கை சேர
ஏதோ ஒர் தவம்
செய்தேனடா ஒஹ்ஹ செய்தேனடா

ஒரு மெழுகின் குடும்பமாய்
தினம் உருகி கரைகிறோம்
சிறு எறும்பின் வரிசையாய்
ஒரு வழியில் நடக்கிறோம்

இது யார் அறிவார் யார் அறிவார்
ஊரும் பார்த்தால் என்ன சொல்ல
கண் படுமே
நிழலாய் இருக்க மரமாய் பிறந்தோம்

பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

லாலாலா லாலா லாலா லாலா லா லா
லாலாலா லாலா லாலா லாலா லா லா