Pillai Thamizh Paadugiren |
---|
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
நீலக் கடல் அலை போல
நீடூழி நீ வாழ்க
நெஞ்சமெனும் கங்கையிலே
நீராடி நீ வாழ்க
காஞ்சி மன்னன் புகழ் போல
காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென
கண்மணியே நீ வாழ்க
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
வான மழை துளியாவும்
முத்தாக மாறாது
வண்ணமிகு மலர் யாவும்
உன் போலே சிரிக்காது
தேடி வைத்த பொருள் யாவும்
தேன் மழலை ஆகாது
திருவிளக்கின் ஒளி அழகும்
உன் அழகைக் காட்டாது
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்