Pinju Manathil Piriyam Valarthu |
---|
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
ஆஅஆஅஆஅஆஅ
பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து
மஞ்சள் அழகும் மணமும் கொடுத்து
வஞ்சம் தீர்க்கும் எதிரி போலே
மனிதரை விதியும் வாட்டுதே
மனிதரை விதியும் வாட்டுதே
கோடி கோடி உயிர்கள் வந்து
ஓடி ஓடிப் போகுதே
கோடி கோடி உயிர்கள் வந்து
ஓடி ஓடிப் போகுதே
கொண்டிருந்த ஆசையெல்லாம்
துண்டுதுண்டாய் ஆகுதே
கோடி கோடி உயிர்கள் வந்து
ஓடி ஓடிப் போகுதே
கண்ணை மூடி திறக்கும் முன்னே
காட்சி வேறாய் மாறுதே
கண்ணை மூடி திறக்கும் முன்னே
காட்சி வேறாய் மாறுதே
கணக்கில்லாத வேகத்தோடு
காலரதமும் ஓடுதே
கோடி கோடி உயிர்கள் வந்து
ஓடி ஓடிப் போகுதே
ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால்
உடனே இருளும் மூடுதே
ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால்
உடனே இருளும் மூடுதே
ஒளியினாலே விரிந்த மலர்கள்
ஒளியால் உதிர்ந்து வாடுதே
ஒளியினாலே விரிந்த மலர்கள்
ஒளியால் உதிர்ந்து வாடுதே
கோடி கோடி உயிர்கள் வந்து
ஓடி ஓடிப் போகுதே
கொண்டிருந்த ஆசையெல்லாம்
துண்டுதுண்டாய் ஆகுதே
கோடி கோடி உயிர்கள் வந்து
ஓடி ஓடிப் போகுதே