Pirakkum Podhum Azhugindraai

Pirakkum Podhum Azhugindraai Song Lyrics In English


பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்


அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
பெரும் பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே