Pirar Vaada |
---|
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவமெய்தி
கொடும் கூற்றுக்கு இறை என பின்
மாயும் பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிக தெளிவி செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய் (வசனம்)
தன்மானம் உள்ள நெஞ்சம்
எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி
மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில்
வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போல் அறுந்து
வீழ்வதில்லையடி
அன்பான உறவு கண்டு
கூடு கட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த
வாழ்கையைதான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி
சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும்
தோல்வி என்பதை ஏற்றதில்லையடி
ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு
ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு
ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு
ஹோ தையை தீயம் தக்கு தீயம் தக்கு