Piriyadha Enna |
---|
ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல
ஒலகமே நமக்குத்தான்
நீ கூட இருந்துட்டா
சொர்க்கமே தொறக்குதா
உன் கூட நடந்துட்டா
உசுரெல்லாம் இனிக்குதா
உன் தோளில் சாஞ்சிட்டா
சிறகுதா முளைக்குதா
உன் கைய பிடிச்சிட்டா
ஒரு வார்த்தைக்கூட
இங்கு சொல்ல தேவை இல்ல
காதல் இதுதான்
பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல
பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல
கையால நானும்
மேகத்த தட்டுறவன்
நீ மட்டும் பார்த்த
கை கட்டி நிக்குறவன்
என் பேர நானும்
எப்போதும் சொன்னது இல்ல
உன் பேர சேர்த்து
சொல்லாத நாளும் இல்ல
ஈரேழு ஜென்மம் தாண்டி
ஒன்ன தோளில் தாங்கனும்
தள்ளாடும் போதும்
கண்ணு ரெண்டும் ஒன்ன தேடனும்
உயிர் விட்டு போகும்
அந்த நொடியில் உன் உருவம்
முன்னாள் வரணும்
பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல
இருவர் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல
ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல
எதுக்குன்னு புரியல