Poda Munivane

Poda Munivane Song Lyrics In English


போடா முனிவனே உனது பூர்வாங்கம்
பிழையாய் பேசுதே மனித ராஜாங்கம்
மேலென்றும் கீழென்றும் பிறவி ஏது
ஞாலத்தில் எனைப் போன்ற துறவி ஏது
மூவர்க்கும் தேவர்க்கும் அறிவென்ன குருடானதோ

புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே
அலை எழும் கடல் இது
அணை இட இங்கு யாரால் ஆகுமோ
விழி எழும் கனல் இது
உலெகெங்கும் இனி நீராய்ப் போகுமோ
நெஞ்சில் ஒரு வஞ்சம் தர முனிவனின்
பொன் பட்ட எண்ணங்கள் புண் பட்ட வேகத்தில்

புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே

பிரம்மனொடு மறை தொழும் அரிஹரனும்
பிரம்ம ரிஷி இவனென அருளியதேன்
நித்தம் ஒரு தவமென பழகியவன்
சித்தம் ஒரு மெழுகென உருகுவதேன்
சுட்ட வடு எளிதினில் மறைந்திடுமோ
சத்திரியக் குலம் என்ன குறைந்ததுவோ
இத்தனையும் நடுங்கிட சபித்திடவோ
அத்தனையும் கருகிட அழித்திடவோ
தத்து கடல் அலை புரள கரைகள் கடந்திடவும்
அலைகள் உடைந்திடவும் சிதற
எட்டு திசை நிலம் அதிர மலைகள் பொடி படவும்
மரங்கள் இடி படவும் உதிர
இரவென்ன பகலென்ன மதி என்ன கதிரென்ன
சகலமும் உலகத்தில் மறையட்டுமே
முதலென்ன முடிவென்ன பிறப்பென்ன இறப்பென்ன
முனிவனின் தவ பலம் தெரியட்டுமே
சிவம் எது தவம் எது நெறி எது முறை எது
குலம் எது குணம் எது இனம் அது எது இனி மேல்
புவி மேல் ஜனனம் மரணம் வருமோ

புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே
அலை எழும் கடல் இது
அணை இட இங்கு யாரால் ஆகுமோ
விழி எழும் கனல் இது
உலெகெங்கும் இனி நீராய்ப் போகுமோ
நெஞ்சில் ஒரு வஞ்சம் தர முனிவனின்
பொன் பட்ட எண்ணங்கள் புண் பட்ட வேகத்தில்

புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே

ஆறாது ஆறாது என் கோபமே

ஆ ஆ ஆ ஆ


தீராது தீராது என் தாபமே

ஆ ஆ ஆ ஆ

அறம் கொன்ற புவி என்றும் சாக்காடுதான்
அனல் வந்து சூழ்கின்ற தீக்காடுதான்
நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக

ஆ ஆ ஆ ஆ

புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக

ஆ ஆ ஆ ஆ

நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக
புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக