Podaiya Oru Kaduthasi |
---|
போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
பல ராத்திரி ஆச்சு தூக்கமும் போச்சு
நெடுநாள் தவிச்சாச்சு
என்னம்மா எம் மகராசி
நீ என்னோட நிலமைய யோசி
ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு
வேணாம் வெளையாட்டு
போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
பாக்கும் வரையில ஏக்கம் தெரியல்லை
பசியே எடுக்கல்லையே
கையும் ஓடல காலும் ஓடல
கண்ணும் தூங்கல்லையே
பூப்போட்ட பொன்னான தேரு
பூமியிலே ஒன்னாட்டம் யாரு
புதுசா இருக்குது பூவா சிரிக்குது
அடியே உன் அழகு
போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
காத்தும் அணைக்குது பூவும் சிரிக்குது
பார்த்தேன் ஒன்ன நினைச்சி
மனசும் துடிக்குது மயக்கம் பொறக்குது
இதுதான் சிறு வயசு
ஆத்தோரம் செவ்வல்லி பூவு
அதுக்குள்ளே சிங்கார வண்டு
எதையோ தேடுது எதுக்கோ ஓடுது
இனிக்கும் எளம் மனசு
என்னம்மா எம் மகராசி
ஹான்
நீ என்னோட நிலமைய யோசி
ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு
வேணாம் வெளையாட்டு
என்னம்மா எம் மகராசி
ஹான்
நீ என்னோட நிலமைய யோசி