Pon Vaanilae |
---|
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி
வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம்தான் வந்தது
வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம்தான் வந்தது
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா
பொன் வண்ணம்
உன் மாலை அழைக்கின்றது
போராடும் என் உள்ளம் ரசிக்கின்றது
பூ வாசம் காற்றோடு சேர்கின்றது
பூபாள ராகங்கள் கேட்கின்றது
என் தாபம்
என் தாபம் என் தாகம் உன்னோடு
அலை பாயுதே அணை மீறுதே
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா
தாளாத மோகங்கள் சங்கீதமே
தாலாட்டும் என் நெஞ்சில் இந்நேரமே
கேளாத ராகங்கள் ரீங்காரமே
கேட்கின்றதென் உள்ளம் உன்னோரமே
என் ஆசைஈ
என் ஆசை என் பூஜை உன்னோடு
தீராமலே சேர்ந்தாடுதே
வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம் தான் வந்தது
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி