Ponaley |
---|
மானே மயிலே மஞ்சளே குங்குமமே
தேனே திரவியமே செல்வமே கற்பகமே
என்று யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன்
காதலித்த கண்மணியைக் கைவிட்டு வந்தேனே
பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே
போனாளேபோனாளே
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளேபோனாளே
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளேஏ
கண்ணின் மணியில் நெல்மணி போலே
காதல் மணியாய் இருந்தாளே
கண்ணின் மணியில் நெல்மணி போலே
காதல் மணியாய் இருந்தாளே
அவள் காதலை வெறுத்து கடமையை நினைத்தேன்
காத்திருக்காமல் பறந்தாளே
போனாளேபோனாளே
நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
அந்த வஞ்சியின் காதலை வஞ்சித்ததாலே
கொஞ்சும் குயிலும் மறைந்தாளே
போனாளேபோனாளே
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளேபோனாளேபோனாளே